சகாக்களுக்கு வணக்கத்துடன் உங்கள் சகா!!
பழைய கதைதான் ஆனாலும் பல மாற்றங்களை கொடுக்கும் கதை.
ஒருநாள் முயலுக்கும் ஆமைக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஓட்டப் பந்தயம் நடந்ததாம், போட்டி துவங்கிய உடனே தனது வேகத்தை காட்டியதாம் முயல். ஆமையும் தனது வேகத்தை காட்டத்துவங்கியதாம். ஒருசில மணித்துளிகளில் முயல் கிட்டத் தட்ட இலக்கை நெருங்கிய போது ஆமை எங்கே வருகிறது என திரும்பி பார்க்க தன் விழிபடலம் எட்டும் வரை ஆமையை காணததால் கண்ணை மூடி சிறிது (?) இளைப்பாறியதாம். அந்த நேரத்தில் ஆமை இலக்கை அடைந்துவிட்டது. வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டதாம்.
இந்த இடத்தில நாம் இருந்தால் முயலாக இருக்க விரும்புவோமா இல்லை ஆமையாக இருக்க விரும்புவோமா. எப்படியோ ஆமை இலக்கு வரை இளைப்பாறாமல் முயன்றதால் வென்றது. நாமும் அப்படிதான் இந்த யுகத்தில் இருக்க வேண்டியுள்ளது.
வாழ்கையில் இது போன்ற நிறைய போட்டிகளை சந்திக்கப் போகிறோம். ஒரு வேலை இந்த முயலுக்கும் ஆமைக்கும் இணை ஒருமுறை போட்டி நடந்தால் இந்த முயல் இதே இளைப்பாறலைக் கை விட்டாலோ அல்லது ஆமை முயல் இளைப்பாறும் நாம் இன்னும் வேகத்தை (?) குறைத்து செல்லலாம் என இறுமாப்பு கொண்டலோ ? விளைவு எப்படி இருக்கும்.
காத்து கொண்டு இருகின்றன
அனேக உதடுகள் - உனது வெற்றி
அதிட்டதால் வந்தது
என்று சொல்ல - நீ அடுத்த முறை
தோற்றால்!!" - நடிகர் அஜித் குமார்
ஆம் உண்மைதான். ஒருவனது வெற்றியை வாழ்த்துவதை விட பழிக்க அநேகம் பேர் உள்ளனர். நாம் முயலாக இருந்தாலும் ஆமையாக இருந்தாலும் நமது இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், முயலமையால் மடிந்து விடக் கூடாது.
ஒருவனது வெற்றி மற்றொருவனது தோல்வியில்தான் அடங்கி உள்ளது. ஒவொரு தோல்வியையும் கொண்டாடுங்கள் வெற்றியைபோல. ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ அது நம்மை வெற்றியை நோக்கி முன்னேற தூண்டுகிறது.

" முயற்சிக்காக வாழ்பவர்களை விட, உழைத்து களைத்தவர்களை விட முயலமையால் மடிந்தவர்களே அதிகம், இது மிருக வாழ்வைவிட கேவலமானது . "
" உன்னால் முடியாது என்று சொல்லபடுவதை, எங்கோ யாரோ ஒருவன் செய்து கொண்டுதான் இருக்கிறான்"என்கிறார் டாக்டர்.அப்துல் கலாம். இது உண்மை தான், எவனோ ஒருவன் செய்து முடிப்பதை ஏன் நம்மால் செய்ய முடியாது.
உலக போரின் போது மாவீரன் அலெக்ஸாண்டர் தனது சொத்துகளை எல்லாம் தன் படை பரிவாரங்களுக்கு எழுதி கொடுத்துவிட்டனாம், அமைச்சர் வினவியபோது இதைவிட அதிகமான சம்பாத்தியத்தை கொடுக்கும் நம்பிக்கையும் உள்ளது என கூறி முயற்சியில் இறங்கினான் என்பது வரலாறு. எனது நோக்கம் வெற்றி அல்ல, தோல்வி அடைய கூடாது என்பதே என பல வெற்றிகள் பெற்றான்.
நாமும் நம்பிக்கையுடன் முயல்வோம்.................வெல்வோம்!
--
என்றும் அன்புடன் உங்கள் சகா
பயமறியான்